கிளிநொச்சி கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கந்தன் குளத்தில் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த  21 வயதுடைய பகிரதன் சுமன் என்ற இளைஞரே விநாயகபுரம் கந்தன் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் சடலத்தினை மீட்கப்பட்டு, உடற்கூறு பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி  பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.