கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு. :  ஒருவர் பலி.

கொட்டாஞ்சேனையில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 51 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

விவேகானந்தா வீதியில்  மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.