சீனாவில் வணிக வளாகத்தில் தீ – 16 பேர் பலி

சீனாவில் வணிகவளாகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் சிகொங் நகரில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

14 மாடி கட்டிடத்தில் இருந்து பெரும்புகை மண்டலம் வெளிவருவதை காண்பிக்கும் படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

வணிகவளாகத்தின் பல்கனிகளில் பெருமளவு மக்கள் காணப்படுவதையும் காணமுடிந்துள்ளது.

வணிகவளாகத்திற்கு 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களையும் வாகனங்களையும் அனுப்பியதாகவும் 39 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுமானபணிகளின் காரணமாகவே தீவிபத்து ஏற்பட்டமை ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவில் இவ்வாறான சம்பவங்கள் வழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது – பொதுவான பாதுகாப்பு தராதரங்கள் பின்பற்றப்படாமையே இதற்கு காரணம், ஜனவரியில் தீவிபத்தில் 39 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.