சோமாலியாவில் குண்டுவெடிப்பு : 9 பேர் பலி 

சோமாலியத்  தலைநகரான மொகடிஷுவில் (Mogadishu) உள்ள ஒரு உணவகமொன்றில்  பயங்கரவாதிகள் நடத்திய  கார் குண்டு தாக்குதலில்  9 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற யூரோ 2024 கோப்பை இறுதிப் போட்டியை காண்பதற்காக குறித்த உணவகத்தில் ஒன்று கூடியவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வில்லா சோமாலியா என அழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.