ஜெய்சங்கருடனான சந்திப்பை ரத்துச்செய்த சம்பந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் (R. Sampanthan) திடீர் சுகயீனம் காரணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடனான சந்திப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு  இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று (20.06.2024)  மாலை 5 மணியளவில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் முக்கியஸ்தர்களைச் சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் தலைவர்கள் எட்டுப்பேருடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது, வடக்கு – கிழக்கு நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்படட்டுள்ளது.

இந்நிலையில், மேற்படி சந்திப்பில் இரா.சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.