ஜேர்மனியில் இரசாயன தாக்குதலை மேற்கொள்ள முயன்ற ஈரான் பிரஜை கைது.

ஜேர்மனியில் இரசாயன தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில்  ஈரானை சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜேர்மனியின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஜேர்மனியில் உள்ள நகரொன்றில் தொடர்மாடியில் வைத்து 32 வயது நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள ஜேர்மனி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர்  சையனைட் ரிச்சின் போன்ற இரசாயன பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என வெளிநாட்டு புலனாய்வு அமைப்பொன்று தெரிவித்ததகவலை தொடர்ந்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரின் சகோதாரர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நபருக்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து  பொலிஸாருக்கு நன்கு தெரிந்திருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சகோதரர்கள் இருவரும் 2015 முதல் ஜேர்மனியில் வசித்துவருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.