தப்பிச்சென்ற கைதிகள் கைது!

நீதிமன்றினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்று மொரகஹஹேன பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் சுமார் 65 கிலோமீற்றர் தூரம் வரை கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றதுடன், சுமார் 6 கிலோமீற்றர் தூரம் ஆறு ஒன்றை கடந்து காடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் பொலிஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி குறித்த இரண்டு கைதிகளும் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.