தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்புமனு தாக்கல்!

வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தமிழர் விடுதலை கூட்டணி இன்று (11) தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது.

வன்னி மாவட்டத்தில் குறித்த கூட்டணியானது  சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணனை முதன்மை வேட்பாளராக கொண்டு போட்டியிடுவதுடன், விசேட தேவையுடைய பெண் ஒருவரும் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.