தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகாிப்பு?

ஜனாதிபதித் தேர்தல்  குறித்த அறிவிப்புக்கள் வெளியாகி வருகின்ற நிலையில் 22 ஆவது திருத்த சட்டம் தொடா்பான நிலைப்பாடு தேர்தலைக் குழப்புவதற்கான ஏற்பாடாகவே பாா்ப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் குறிப்பிடுகையில்,

“ஜனாதிபதித் தேர்தல்  குறித்த அறிவிப்புக்கள் வெளியாகி வருகின்ற நிலையில் 22 ஆவது திருத்த சட்டம் தேவையா? இது தேர்தலை குழப்புவதற்கான ஏற்படா ? எனும் சந்தேகம் தற்போது பலரிடம் ஏற்பட்டுள்ளது.

22ஆம் திருத்த சட்டத்தை கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கும் போது இந்த திருத்தம் தேவையா? எனும் கேள்வி எழுகிறது.

இப்போது ஏன் அவரசப்பட்டு மாற்ற முனைகிறார்கள் என தேர்தலை குழப்பும் நடவடிக்கையாக இருக்கும் என சந்தேகிக்கிறோம்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடு வக்குரோத்து அடைந்துள்ளதொனக் கூறித் தேர்தலை கால வரையின்றி ஒத்தி வைத்துள்ளனர்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி திட்டங்களுக்கு என 5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையில் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் மதுபான சாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றது எனவும் செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதற்காகவே  அவ்வாறு அபிவிருத்திக்கு என கோடி க்கணக்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தொிவித்துள்ளாா்.