தலவாக்கலை தொடர் குடியிருப்பில் தீ பரவல்

தலவாக்கலை – மிளகுசேனை தோட்டத்தில் மின் கசிவின் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்த தீப்பரவல் நேற்று இரவு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்குடியிருப்பின் 5 வீடுகளின் கூரைகள் முற்றாகத் தீயினால் சேதமடைந்துள்ள என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் குடியிருப்பில் வசிப்போரின் உடைமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர், உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.