துப்பாக்கிச்சூட்டில் 15 பெண்கள் உட்பட 17 பேர் பலி

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள லுசிகிசிகி கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர்.

இருவேறு வீடுகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் 15 பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கையை தென்னாபிரிக்க பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.