தேசபந்து தென்னகோனுக்கு இடைக்காலத் தடை

காவல்துறைமா அதிபராக தேசபந்து தென்னகோன் செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

காவல்துறைமா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மீள பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட 8 தரப்பினரால் 9 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.