நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். ; 6 பேர் பலி.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்தனர்.

ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று மாலை நேபாளத்தில் உள்ள டோத்தி மாவட்டத்தில் 4 புள்ளி 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

வீடுகள் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது.

டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் வட மாநிலங்களில் கட்டிடங்கள் அதிர்வுக்குள்ளாகின .

சில இடங்களில் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.