பதுளையில் விபத்து ; நால்வர் மரணம் 

பதுளை – சொரனாதோட்டை வீதியில் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று பாரவூர்தியொன்று விபத்துள்ளாகியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொனராகலையில் இருந்து வீதிகளில் பேருந்து தரிப்பிடங்களை அமைப்பதற்காக வந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.