பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்! – மீனாக்ஷி கங்குலி

”வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகள்,  பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு  வலியுறுத்த வேண்டும்” என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்ஷி கங்குலி (Meenakshi Ganguly)  வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதத்  தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டுவருவதாக, அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தமது எதிராளிகளுக்கு எதிராகப்  பயன்படுத்துவதாகவும்  மீனாக்ஷி கங்குலி இதன்போது  குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக நாட்டின் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்த அவர் கடந்த காலத்தில்  சர்வதேச அழுத்தங்கள் காரணமாக நாட்டில்  சிறியளவு முன்னேறங்கள் ஏற்பட்டிருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.