பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, www.doenets.lk எனப்படும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.