பாகிஸ்தானில் கனமழை. ; 320 பேர் பலி.

பாகிஸ்தானில் கனமழை, பெருவெள்ளம் காரணமாக  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 5 வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பலுசிஸ்தான் மாகாணத்தில் சுமார் 13, 000 வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியுள்ளன.

இதுவரை இந்த மாகாணத்தில் 46 சிறுவர்கள் உள்பட 127 பேரும், கராச்சி, சிந்து மாகாணங்களில் 70 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, பலுசிஸ்தான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

30 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாக பதிவாகியுள்ளது.