பாஜக நிர்வாகி வெடிகுண்டு வீசி, வெட்டி படுகொலை..!

சென்னை பூந்தமல்லி அருகே பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி ஓட ஓட விரட்டி வெட்டி படு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் பிபிஜி சங்கர். இவர் பாஜக எஸ்சி – எஸ்டி பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று சங்கர் தனது காரில் சென்னைக்கு சென்றார். தொடர்ந்து நேற்று இரவு சென்னையில் இருந்து வீட்டுக்கு

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நசரேத் பேட்டை சிக்னல் சங்கர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று திடீரென சங்கரின் காரை வழிமறித்து அந்த கார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கர் காரை நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கி ஓடினார். எனினும் அந்த கும்பல் தொடர்ந்து விடாமல் துரத்திச்சென்று ஓட ஓட வெட்டியுள்ளது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் நசரத் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கரின் உடலை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.