பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான  சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை (03) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் பயண நடவடிக்கைகள் தடைபட்டதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும், மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 3834 குடும்பங்களை சேர்ந்த 13717 பேர் பாதிக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  

அதேவேளை, பல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனை அண்டியுள்ள குடும்பங்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளன.