பாறைகள் சரிந்து விழுந்து 15 பேர் பலி

மிசோரம் மாநிலம், ஐஸ்வாலில் உள்ள கல்குவாரியொன்றில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரெமல் புயல் காரணமாக ஐஸ்வால் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகவே குறித்த கல்குவாரியில் இருந்து பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் எனவும், இது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.