பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது !

மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய  அடக்கம் செய்யப்பட்ட அவரின் பூதவுடலை மீண்டும் தோண்டுவதற்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் வியாழக்கிழமை (25 ) கொழும்பு, பொரளை பொது மயானத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவினால் அவரின் உடல்  தோண்டி எடுக்கப்பட்டது.