புகையிரதத்துடன் மோதி தாயும் மகனும் பலி 

திருகோணமலை – சீனக்குடா பகுதியில் நேற்று (11) பிற்பகல்  புகையிரதத்துடன் மோதி தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா (10) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

புகையிரதப் பாதையை கடக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக   தெரிவித்துள்ள   சீனக்குடா  காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.