பேருந்து விபத்து!

அரநாயக்க – கந்துன வீதியில் நேற்றையதினம் (03) பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.
 
குறித்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்தார்.
 
விபத்து ஏற்படும் போது பேருந்தில் சாரதி மாத்திரமே இருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.