மட். செங்கலடி திரையரங்கில் பெண்களுக்கு ஏற்ப்பட்ட இன்னல்.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில்  உள்ள திரையரங்கில் திரைப்படம் பார்க்கச் சென்ற வெளிமாவட்டத்தை சார்ந்த பெண்களின் கைப் பைகளை  குறித்த திரையரங்கின் ஊழியர்கள் சோதனையிட்டு வருவதாக பெண்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

வெளி மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பிற்கு சென்ற பெண்கள் குழுவினர் பலர் குறித்த திரையரங்கிற்கு  திரைப்படம் பார்க்கச்  சென்றுள்ளார்கள். இதன் போது  திரையரங்க ஊழியர்கள் பெண்களின் கைப் பைகளை சோதனையிட்டுள்ளார்கள்.

எதற்காக என்று பெண்கள் வினவிய போது,

வெளியில் இருந்து உணவுகள் கொண்டு வர அனுமதி இல்லை. தங்களது சிற்றுண்டிச் சாலையில் உணவுகள் கொள்வனவு செய்ய வேண்டும் என்று பதில் கூறப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் பெண்களை சோதனையிடுவதற்கு எதிர்ப்பு தெரித்து பெண் போலீசார், பெண் இராணுவத்தினரே பெண்களின் உடமைகளை சோதனையிட்டு வரும் பொழுது குறித்த செங்கலடி திரையரங்கில் மாத்திரம் ஆண்கள் எவ்வாறு பெண்களின்  உடமைகளை சோதனை போட முடியும் என்று பெண்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்,

குழந்தைகளுக்குரிய பால் உணவு வகைகளை திரையரங்க உணவுக் கூடங்களில் வேண்டி கொடுக்க முடியாது.

மேலும் குறித்த திரையரங்க உரிமையாளர்கள் தங்களது நிபந்தனைகளை முன்னறிவிப்பாக பொது வெளியில் அறிவிப்பு செய்திருக்க வேண்டும்.

 இதனை திரையரங்க உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திரையரங்கில் இவ்வாறான சட்ட திட்டங்கள் உள்ளதா? என்று கேள்விகளை எழுப்புகிறார்கள்.

எனவே மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்தினர் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.