மஹிந்தானந்தவுடன் மோதல் – நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் படுகாயம்!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் முடிவில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
நேற்று (03) பிற்பகல் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
 
இதன்போது கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
 
எவ்வாறாயினும், கூட்டம் முடிந்து வௌியேறும் போது மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக்க ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் மாடிப்படியில் வைத்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதன்போது மஹிந்தானந்த அளுத்கமகே தன்னை உதைத்ததாகவும், இதனால் தான் காயமடைந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.