தமது பாடசாலைகளுக்கு சொல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்து வடமாகாண ஆளுநர் சொயலகம் முன்பாக தென்மராட்சி பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பொற்றோர்கள் நேற்று புதன்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், தமது வீதி 50 வருடமாக புனரமைக்கப்படவில்லை எனவும் இதன் காரணமாக மழை காலங்களில் பாடசாலைக்கு செல்வதற்கு பெரும் அசொளகரிகங்களை எதிர் நோக்குவதாக தெரிவித்தனர்..
இது தொடர்பில் ஆளுநருக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இரண்டு மாதங்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சாட்டினர்.
அது மட்டுமல்லாது ஆளுநரை தான் சந்திக்க வந்ததாகவும் அவர் தம்மை சந்திக்காமல் மூன்று மணித்தியாளங்களுக்கு மேலாக பாடசாலை மாணவர்கள் வெயிலில் நிற்பது தெரிந்தும் வெளியில் வராமல் உள்ளுக்குள் அறையில் இருப்பதாக குற்றச்சாட்டினார்.
போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் வடக்கு ஆளுநரே வெளியில் வா வீதி இல்லாத பாதைக்கு ஏன் வரி பணம் என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.