மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் திகதி அறிவிப்பு!

மின்சாரக் கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 
மேலும் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான எழுத்து மூல மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.