முல்லைத்தீவில் கரை வலை தொழிலாளி கடல் இழுத்து பலி.

முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி கடற்கரையில் கரைவலை தொழில் செய்துவரும் 23 அகவையுடைய தொழிலாளி ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை கருநாட்டுக்கேணி கடற்கரைப் பகுதியில் கரைவலைக்காக கடலில் இறங்கி கயிறு இழுத்த வேளை கடல் அலை இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன நிலையில் காணாமல் போன மீனவரை தேடும் நடவடிக்கையில் கடற்தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் இன்று காலை கொக்குளாய் கடற்கரையில் காணாமல் போன மீனவரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.

உடலத்தினை மீட்ட மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கொக்கிளாய் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

இதன்போது 23 அகவையுடைய மீகமுவ பிரதேசத்தினை சேர்ந்த கடற்தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.