யாழிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து : மூவர் பலி

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக யாழ்ப்பாணத்திலிருந்து  கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு, திருத்த வேலை மேற்கொள்ளப்பட்டிருந்த போதே, பார ஊர்தி, குறித்த பேருந்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்து நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின்போது சொகுசு பேருந்தின் திருத்த பணியில் ஈடுபட்டிருந்த மூவரே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்தவர் அவசர சேவை வாகனம் மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.