யாழில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஒருவர் பலி.

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதுடைய வயோதிபப் பெண்ணே நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்தார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய் தொற்றின் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.