யாழில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

யாழ்ப்பாணம் – தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் நேற்றைய தினம் (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கதிரவேலு செல்வநிதி என்ற 49 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், விசாரணைகளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.