யாழில் வடையும், ரீயும் சாப்பிடுவதற்கு ஐ.போனை அடகுவைத்த பயணி.

யாழ்ப்பாணத்தில் வடையும், ரீயும் சாப்பிட்டமைக்காக,வெளிநாட்டு பயணி ஒருவர் உணவகத்தில் ஐ.போன் அடகு வைத்த சுவாரசியமான சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றது.

வெளிநாட்டு பயணி ஒருவர் யாழ்ப்பாணம் நகர் புறத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, உணவருந்த சென்றுள்ளார்.

குறித்த உணவகத்தில் வடையும், ரீயும் சாப்பிட்ட பின்னர் 170 ரூபா பில்லுக்கான பணத்தை செலுத்துவதற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் 5000 ரூபா தாளை நீட்டியுள்ளார்.

இதன் போது 170 ரூபாவுக்கு 5000 ரூபாவை மாற்றி கொடுப்பதற்கும் பணம் இல்லை என உணவக கணக்குப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சங்கடத்துக்கு உள்ளான வெளிநாட்டவர், தன்னிடமிருந்த ஐபோனை உணவகத்தில் கொடுத்த பயணி பணத்துடன் வருகின்றேன் என கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதன்பின்னர் 30 நிமிடங்கள் கழித்து 170 ரூபா பணத்தை உணவகத்தில் கொடுத்து தனது ஐபோனை அவர் மீட்டு சென்றதாக கூறப்படுகின்றது.