யுரேனஸ்ஸை அடைவதே என் கனவு! ; எலோன் மஸ்க்

”யுரேனஸ்ஸிற்கு மனிதர்களை அனுப்புவதே தனது கனவு” என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும் உலகின் மிகப்பெரும் செல்வந்தருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலோன் மஸ்க் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது

”இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நான்காவது கிரகமான செவ்வாய் கிரகத்திற்கு  மனிதர்களை அனுப்பி உள்ளோம்.

மேலும் செவ்வாய் கிரகத்தில் மில்லியனுக்கும் அதிகமான மனிதர்களை அனுப்புவது தான் எனது அடுத்த கட்டத் திட்டம்.

இந்தத் திட்டம் வெற்றி அடைந்த பின்னர், அடுத்து ஏழாவது கிரகமான யுரேனஸூக்கு மனிதர்களை அனுப்புவதே எனது கனவு” இவ்வாறு எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.