ரணிலின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குமாறு சம்பந்தன் மஹிந்தவிடம் கோரிக்கை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று மாலை சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

தற்போதைய அரசியல் நிலவரம் உட்பட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் ஜனாதிபதி ரணிலின் முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு சம்பந்தன்  மஹிந்தவிடம் கோரியதாகவும், மஹிந்த அதற்கு சாதகமான பதிலை வழங்கியதாகவும் தெரியவருகிறது.