ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது.

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது  செய்து, தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

கடற்படை அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர், மீனவர்கள் 6 பேர் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.