வடமாகாண விவசாயிகளின் உற்பத்திகளை விநியோகம் செய்தல் பொறிமுறை விரிவாக்கம்

வடமாகாண விவசாயிகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்தல் மற்றும் விநியோகம் செய்தல் பொறிமுறையை விரிவாக்கம் செய்யுமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் அறுவடையானது விவசாயிகளுக்கு இலாபத்தினை ஈட்டித்தரக்கூடியதாக அமைய வேண்டும்.

அதற்கான பொறிமுறையொன்றினை நாங்களே அடையாளம் காண வேண்டும். என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.