வவுனியாவில் யானை தாக்கி முதியவர் பலி.

வவுனியா, சேமமடு கிராமத்தில் யானை தாக்கி முதியவர் ஒருவர் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, சேமமடு பகுதியில் வசிக்கும் 68 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டில் தேன் எடுப்பதற்காக சென்றுள்ளார்.

இதன்போது, காடு நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வீதியின் குறுக்கே நின்ற யானை அவரை தாக்கியுள்ளது.

சம்பவ இடத்திலேயே முதியவர் மரணமடைந்துள்ளார்.

வீதியால் சென்றவர்கள் அதனை அவதானித்து பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் சடலத்தை மீட்டு உள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.