விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

பிபில – மஹியங்கனை பிரதான வீதியில் வெகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (12) புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வேன் ஒன்று தனியார் பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.