விமான நிலைய மேற்கூரை இடிந்து விபத்து ஒருவர் மரணம்!

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலைய முனையம் 1 இல் மேற்கூரையின் ஒரு பகுதி இன்று (28) அதிகாலை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனை அடுத்து அந்த முனையத்தில் இருந்து அனைத்து விமானப் புறப்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இன்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 228.1 மி.மீ மழை பெய்த நிலையில், டெல்லியிலும் இடைவிடாத மழை பெய்த நிலையிலேயே  இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.