விளையாட்டு திடலில் தீ விபத்து ; 37 பேர் உயிரிழப்பு

இந்தியா-குஜராத் மாநிலத்தில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் விடுமுறை நாளான இன்று சிறுவர்கள் பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் கூடியிருந்தனர்.

இந்நிலையில், அந்த கேளிக்கை அரங்கில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் குழந்தைகள் உள்ளிட்ட 37 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தீ விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.