வெளிநாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சஹ்ரான் கைது.

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு பெண்கள் இருவரை  பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை நேற்றுமுன் தினம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலாவெளி – வேலூர் பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த 28 வயது மற்றும் 31 வயதுடைய பெண்கள் இருவர் கடற்கரையோரமாக சென்றுள்ளனர்.

இதன்போது உள் வீதியூடாக வந்த இளைஞன் இரு யுவதிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சஹ்ரான் என்ற இளைஞரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களும் சட்ட வைத்திய நிபுணர் அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.