வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி- மூவர் கைது!

பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி 12 பெண்களிடம் மூன்றரை கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை பெற்று மோசடி செய்த 2 பெண்களும் ஆண் ஒருவரும் நேற்று (23) யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணம் செலுத்தி நான்கு மாதங்களுக்கு மேலாகியும் வெளிநாட்டு வேலை கிடைக்காத காரணத்தினால் பெண்கள் நால்வர் யாழ்ப்பாண காவல் துறையினரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இக்குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் இரண்டு பெண்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், ஆண் தெஹிவளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த யாழ்ப்பாண காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.