இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நேற்று (03) இரவு 21 வயது பெண் மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.

நேற்றிரவு 11 மணியளவில், பெண் தனது நண்பருடன் வெறிச்சோடிய மற்றும் வெளிச்சம் இல்லாத பகுதியில் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து புனே குற்றப்பிரிவு பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கோந்த்வா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மற்றொரு பொலிஸ் அதிகாரி, இந்த சம்பவம் ஒரு தனிமையான இடத்தில் நடந்ததாகவும், மூவரும் அந்த பெண்ணின் நண்பரையும் தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் பழிவாங்கலைத் தூண்டியுள்ளது.