பாகிஸ்தான் விமான நிலையம் அருகே தாக்குதல்!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையம் அருகே இடம்பெற்ற வெடிவிபத்தில் சீன பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனால், பல வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன.

பாகிஸ்தானில் உள்ள சீனத் தூதரகம், இதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் என்று விவரித்துள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மின் திட்டத்தில் பணிபுரியும் சீன பொறியாளர்களின் தொடரணியை குறிவைத்து இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (06) நடத்தப்பட்டுள்ளதாக தூதரகம் மேலும் கூறியது.

தாக்குதலுக்கு பிரிவினைவாத பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA), தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.