2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தியுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டத்தை இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவு திட்டம் இதுவாகும்.