துப்பாக்கிச் சூட்டில் தந்தையும், மகளும் பலி!

அம்பாந்தோட்டை மாவட்டம் மித்தெனிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட கடேவத்த சந்தி பகுதியில் நேற்று (18) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.  

இந்த துப்பாக்கிச் சூட்டில் 39 வயது தந்தையும், 06 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்பொத்த பகுதியை சேர்ந்த அருணா விதானகம என்கிற கஜ்ஜா என்பவரே சம்பவம் நடந்த நிகழ்ந்த இடத்தில் உயிரிழந்துள்ளார்.

 மோட்டார் சைக்கிளில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில், பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கி சீட்டினை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழந்ததோடு, பலத்த காயமடைந்த மகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  

 குறித்த துப்பாக்கிப் பிரயோகத்திற்காக T56 ரக துப்பாக்கி பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.