INDvSA ; தென்ஆப்பிரிக்க அணி 05 விக்கெட்டுகளால் வெற்றி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 05 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக சூர்யகுமார் யாதவ் 68 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இந்திய ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் லுங்கி நெகிடி 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில், 134 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக டேவிட் மில்லர் 59 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ராம் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் 25 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

INDvSA