அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு ; 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், வொய்டியர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் உள்ள இருவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ள நிலையில், உடனடியாக அங்கு வந்த பொலிஸார் மர்ம நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மூவரும் உயிரிழந்துள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்