புதிதாக சேவையில் இணைந்து கொண்ட தாதி உத்தியோகத்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (26) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரிந்துவிட்டு பண்டாரவளையிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய நிலையில் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை மகுல்லல்லேல பகுதியைச் சேர்ந்த சந்துனி சுலோச்சனா என்ற 24 நான்கு வயதுடைய புதிய தாதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவராவார்.