அமெரிக்கா – வடக்கு சியாட்டிலில் உள்ள பாடசாலை ஒன்றில் காலையில் திடீரென இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாணவரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக அங்கு விரைந்து, காயமடைந்த மாணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் படுகாயமடைந்த குறித்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் ஏனைய மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாடசாலை மூடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பாடசாலை முழுவதும் பொலிஸார் சோதனை நடத்திய நிலையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![](http://sirakukal.com/storage/2022/11/Seattle-High-School-Shooting-2.jpg)
![](http://sirakukal.com/storage/2022/11/Seattle-High-School-Shooting-1.jpg)
![](http://sirakukal.com/storage/2022/11/Seattle-High-School-Shooting-3.jpg)
![](http://sirakukal.com/storage/2022/11/Seattle-High-School-Shooting-4.jpg)
![](http://sirakukal.com/storage/2022/11/Seattle-High-School-Shooting-5.jpg)
![](http://sirakukal.com/storage/2022/11/Seattle-High-School-Shooting-6.jpg)
![](http://sirakukal.com/storage/2022/11/Seattle-High-School-Shooting-7.jpg)